Tuesday 7th of May 2024 10:10:51 AM GMT

LANGUAGE - TAMIL
.
திருகோணமலை கல்வி கோட்டத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் மூடப்படுகின்றன!

திருகோணமலை கல்வி கோட்டத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் மூடப்படுகின்றன!


திருகோணமலை கல்வி கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநர் இவ் அறிவிப்பை விடுத்துள்ளார்.

முன்னதாக,

திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட சில பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளில் கல்வியமைச்சு, சுகாதார அமைச்சுக்களின் அறிவுறுத்தலுக்கு முரணாக ஆரம்பப்பிரிவு மாணவர்கள் பாடசாலைக்கு அழைக்கப்பட்டு வகுப்புக்கள் நடாத்தப்படுவதாக எமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதுடன், நோய்த்தொற்று ஆய்வுகளின் போது சில கல்லூரிகளின் ஆசிரியர்கள் நோய்த் தொற்று அபாயத்துக்குள்ளானவர்களாக இனங்காணப்பட்டுள்ளமையும் தமது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்பதால் ஆரம்பப்பிரிவு மாணவர்கள் அழைக்கப்பட்டு வகுப்புக்கள் நடாத்துவதை உடன் நிறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள் என்று தெரிவித்து திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரியால் அறிவுறுத்தல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE